உள்ளூர் செய்திகள்

ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி

Published On 2023-05-28 13:07 IST   |   Update On 2023-05-28 13:07:00 IST
  • யார் என அடையாளம் தெரியவில்லை
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஆம்பூர், விண்ணமங்கலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல் முழுவதும் உருக்குலைந்து கிடப்பதால் இறந்தவர் யார் என்று அடையாளம் காண்பது போலீசாருக்கு சிக்கலாக உள்ளது. இறந்தவர் மாநிறம் உடையவர் வெள்ளை கலர் சர்ட், வெள்ளை கலர் வேட்டி அணிந்துள்ளார்.

இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் லத்தேரி காவலூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 30 வயது தக்க வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்கும் போது அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் மாநிறம் உடையவர் நீல நிறத்தில் சிவப்பு கலர் கலந்த டி ஷர்ட், கருப்பு கலர் லோயர் அணிந்து உள்ளார் இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலிசார் விசாரணை செய்து வரு கின்றனர்.

ஜோலார்பேட்டை ஆம்பூர் லத்தேரி ஆகிய இடங்களில் ஒரே நாளில் 2 பேர் இறந்து ள்ளனர் இறந்தவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News