ரெயிலில் கடத்திய ரூ.2 லட்சம் கஞ்சா பறிமுதல்
- 19 கிலோ சிக்கியது
- பீகார் வாலிபர் கைது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரளா மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 1 வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அப்போது சிறப்பு தனி படை பிரிவினர் ரெயில் பெட்டியில் சோதனை செய்தபோது முன் பதிவு செய்யப்பட்ட எஸ் 14 இருக்கையின் அடியில் இருந்த பேக் ஒன்றை சோதனை செய்தபோது.
அதில் 19 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருக்கையின் அருகே அமர்ந்திருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
இவர் பீகார் மாநிலம் நிர்பூர் அடுத்த காஸ்மாரா பகுதியை சேர்ந்த சங்கர் பிரசாத் மந்தர் என்பவரின் மகன் அமித் குமார் (வயது 21) என்பதும், இவர் பீகார் மாநிலம் நிர்பூர் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கிக்கொண்டு கேரளா மாநிலம் எர்ணாகுளம் சென்று அங்கு கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் பீகார் மாநில வாலிபரை கைது செய்து ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 19 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.