உள்ளூர் செய்திகள்

திருட்டுப் போன கோவில். கோவில் இருந்த உண்டியலை அருகில் வீசி சென்றிருப்பதை காணலாம்.

2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

Published On 2023-03-15 14:22 IST   |   Update On 2023-03-15 14:22:00 IST
  • உண்டியலை வாழைதோட்டத்தில் வீசி சென்ற கும்பல்
  • போலீசார் விசாரணை

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த கந்திலி அருகே சின்ன கன்னால பட்டி கிராமத்தில் தேசத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

கோவில் தினமும் காலையில் திறப்பதும், மாலையில் மூடி செல்வதும் வழக்கம். நேற்று முன்தினம் பூஜாரி பூஜைகளை முடித்துவிட்டு மாலை கோவிலை பூட்டி சென்று விட்டார்.

நேற்று காலை கோவிலில் திறப்பதற்காக வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயின், 2 வெள்ளி குத்து விளக்கு மற்றும் உண்டியல் காணிக்கை பணம் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

மேலும் உண்டியலை கோவிலில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் உள்ள வாழை தோட்டத்தில் வீசி சென்றுள்ளனர்.

இதே போல செம்மினி கொல்லி மேடு பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தாலி செயின், பூஜைக்கு பயன்படுத்தும் வெள்ளி, வெண்கலம் பொருட்களையும் திருடி சென்றனர்.

அடுத்தடுத்து ஒரே இரவில் 2 கோவில்களின் பூட்டை உடைத்து திருடி சென்று இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில்களில் திருடி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News