உள்ளூர் செய்திகள்

கலைத்துறையில் சாதனைப்படைக்க விண்ணப்பிக்கலாம்

Published On 2023-05-31 09:30 GMT   |   Update On 2023-05-31 09:30 GMT
  • வருகிற 20-ந் தேதி கடைசி நாள்
  • கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தகவல்

திருப்பத்தூர்:

தமிழகத்தின் கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ்மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத்துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குகலை இளமணி விருது; 19 முதல் 35 வயது வரை கலை வளர்மணி விருது, 36 முதல் 50 வயது வரை கலைச் சுடர் மணி விருது, 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது' வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள் ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், ஓவி யம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க் கால் குதிரை, தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக் கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

தங்கள் சுயவிவர குறிப்பு, புகைப்படம், வயது சான்று, முகவரிச்சான்று (ஆதார் அட்டை நகல்) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் இயக்குநர், கலை பண்பாட் உதவி டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் 631502 என்ற முகவரிக்கு வருகிற 20-ந்தேதிக்குள் விண்ணப் பிக்கலாம்.

இத்தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரி வித்தார்.

Tags:    

Similar News