உள்ளூர் செய்திகள்
மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா மெட்ரிக் பள்ளி தேர்வு
- போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 9 குறு வட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- 17வயதுக்குட்பட்ட கைப்பந்து போட்டியில் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக் தகுதி பெற்றுள்ளனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி தூத்துக்குடி காரபேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 9 குறு வட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் திருச்செந்தூர் குறு வட்ட அளவில் 17வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான கைப்பந்து போட்டிக் தகுதி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் ராமமூர்த்தி, முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் பாராட்டினர்.