உள்ளூர் செய்திகள்
திரவுபதை அம்மன் கோவிலில் தீமிதி விழா
- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வீதியுலா காட்சி நடைபெற்றது.
- பக்தர்கள் வேதமிர்த ஏரியில் புனித நீராடி கோவிலின் முன்பு அமைக்கபட்ட குண்டத்தில் இறங்கி தீமித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஞாயிற்று சந்தைதோப்பு தேவி திரவுபதை அம்மன் கோவில் ஆண்டு பெருவிழா கடந்த 3 -ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வீதியுலா காட்சி நடைபெற்றது .
மகாபாரத கதை பாடப்பெற்று நேற்று படுகளம் திரவுபதை கூந்தல் முடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு விரதம் இருந்த பக்தர்கள் வேதமிர்த ஏரியில் புனித நீராடி கோவிலின் முன்பு அமைக்கபட்ட குண்டத்தில் இறங்கி நூற்றுக்கானக்கன பக்தர்கள் தீமித்தனர். பின்பு அம்பாள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு வீதியுலா நடைபெற்றது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் , உபயதாரர்கள் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.