உள்ளூர் செய்திகள்
புகையிலை பொருட்களை விற்றவர்கள் கைது
- அங்கு உள்ள ஒரு டீ கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
- சுபதர்மேடு பகுதி சேர்ந்த ராமன்(44) என்பவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை போலீஸ்சார் கிருஷ்ணகிரி- சென்னை சாலை சுபேதார்மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு உள்ள ஒரு டீ கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து சுபதர்மேடு பகுதி சேர்ந்த ராமன்(44) என்பவரை கைது செய்தனர்.
மேலும் இதே போல் கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே தடை செய்யப்பட்ட புகையில பொருளை விற்பனைசெய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை சேர்ந்த கல்பேஷ்(26)என்பது தெரியவந்தது இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.