உள்ளூர் செய்திகள்

விபத்தில் சேதமான தனியார் பள்ளி பஸ்சை படத்தில் காணலாம்.

திட்டக்குடி அருகே இன்று காலை: தனியார் பள்ளி பஸ் மீது லாரி மோதி விபத்து:குழந்தைகள் காயம்

Published On 2023-02-09 09:26 GMT   |   Update On 2023-02-09 09:26 GMT
  • தினந்தோறும் பள்ளி வாகனங்கள் சென்று பள்ளி குழந்தைகளைஅழைத்து வருவது வழக்கம்.
  • நின்று கொண்டிருந்த பஸ்சின் பின்புறம் லாரி வேகமாக மோதியது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மங்களூர் நேரு மழலையர் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு அருகிலுள்ள தொண்டாங்குறிச்சி, அரியநாச்சி, கழுதூர், கல்லூர், ஆவட்டி ,ம.பபுடையூர் பகுதிக்கு தினந்தோறும் பள்ளி வாகனங்கள் சென்று பள்ளி குழந்தைகளைஅழைத்து வருவது வழக்கம்.இந்நிலையில் வழக்கம் போல் பள்ளி பஸ் இன்றும் குழந்தைகளை அப்பகுதியில் இருந்து அழைத்துக் கொண்டு ஆவட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த பகுதியில் உள்ள கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பள்ளி குழந்தைகள் ஏற்றிக் கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அப்போது நின்று கொண்டிருந்த பஸ்சின் பின்புறம் லாரி வேகமாக மோதியது  இந்த விபத்தில் பஸ்சில் இருந்த குழந்தைகள் அலறினர். மேலும் இதில் 4 குழந்தைகள் காயம் அடைந்தனர். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனே குழந்தைகளை மீட்டு அருகிலுள்ள வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது.

Tags:    

Similar News