உள்ளூர் செய்திகள்

கொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி.

கடலூரில் இன்று காலை பயங்கரம் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை

Published On 2023-01-10 07:06 GMT   |   Update On 2023-01-10 07:06 GMT
  • கிருஷ்ணமூர்த்தி தினசரி இரவு நேரத்தில் வழக்கம்ேபால் வீட்டுமுன்பு தூங்குவார்.
  • தனது வீட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

கடலூர்: 

கடலூர் முதுநகர் போலீஸ் சரகம் ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 26). கூலி தொழிலாளி. இவர் தினசரி இரவு நேரத்தில் வழக்கம்ேபால் வீட்டுமுன்பு தூங்குவார். அதன்படி நேற்று இரவு வீட்டுக்கு வெளியே கிருஷ்ண மூர்த்தி தூங்கினார். இன்று காலை கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழி யாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராள மானோர் திரண்டனர். இதுபற்றி கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த கிருஷ்ண மூர்த்தியின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. இவரை மர்மநபர்கள் கத்தி யால் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆற்றில் வாலிபர் ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் கிருஷ்ணமூர்த்தி சம்மந்தப் பட்டுள்ளது தெரியவந்தது. எனவே பழிக்குபழியாக கிருஷ்ணமூர்த்தி கொலை செய்யப்பட்டாரா? அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் விரைந்து சென்று கொலை யாளிகளின் ரேகைகளை பதிந்து தீவிரமாக துப்புதுலக்கி வருகிறார்கள். அந்த பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News