உள்ளூர் செய்திகள்

திருவோடு ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

திருவோடு ஏந்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-22 14:58 IST   |   Update On 2022-10-22 14:58:00 IST
  • சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் கடந்தாண்டு தொடர் மழையால் பாதிக்கப்பட்டது.
  • பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவோடு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் கடந்தாண்டு தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கையில் திருவோடு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கம் சீர்காழி ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார்.

கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், சீர்காழி ஒன்றிய தலைவர் சி. கலியமூர்த்தி, கொள்ளிடம் ஒன்றிய தலைவர் கே கலியமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீரராஜ் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் சிவராமன், ஏ ஐ டி யூ சி மாவட்ட செயலாளர் ராமன் ஆகியோர் கடந்த 2021- 2022 பயிர் காப்பீடு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து வகைகளுக்கும் உரிய பயிர் காப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நீதி சோழன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஜெய சக்திவேல், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பிரபாகரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் வித்யா தேவி, கட்சி நிர்வாகிகள் பாஸ்கரன், ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News