உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜை நடைபெற்றபோது எடுத்த படம்.

கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் திருவிளக்கு பூஜை

Published On 2023-01-18 08:35 GMT   |   Update On 2023-01-18 08:35 GMT
  • ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
  • கன்னிப்பெண்கள், சுமங்கலி பெண்கள் ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை செய்தனர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் தை முதல் செவ்வாய் காட்சி திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

மாலை 6 மணிக்கு மேல் ஆலய வளாகத்தில் கன்னிப்பெண்கள், சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தார்கள். சங்கரேஸ்வரி, சுப்பாராஜ் தொடங்கி வைத்தார்கள். பூஜைகளை விளக்கு பூஜை குழுவினர் பத்மாவதி தலைமையில், லட்சுமணன் சுவாமி ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தார். இதில் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், சண்முகத்தாய், செல்வராணி, ஜோதிலட்சுமி, சந்திரா மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய காட்சி குழுவினர் செய்தனர்.

Tags:    

Similar News