உள்ளூர் செய்திகள்

பைக் மீது புளிய மரம் சாய்ந்து தொழிலாளி பலி

Published On 2023-09-14 10:34 GMT   |   Update On 2023-09-14 10:34 GMT
  • பாளைய ஏகாம்பரநல்லூர் கூட்ரோடில் பரிதாபம்
  • போலீசார் விசாரணை

கண்ணமங்கலம்:

சந்தவாசல் அருகே கன்னிகாபுரம் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் கந்தசாமி (54).நேற்று 13ம்தேதி காலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

அப்போது திருவண்ணாமலை செல்லும் ரோட்டில் பாளைய ஏகாம்பர நல்லூர் கூட்ரோடில் சாலையோரம் இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்து,கந்தசாமி சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது சம்பந்தமாக தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கந்தசாமி பிணத்தை பிரேத பரிசோதனைக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News