உள்ளூர் செய்திகள்

ஆற்காடு போலீஸ் நிலையத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆய்வு

Published On 2023-12-03 07:45 GMT   |   Update On 2023-12-03 07:45 GMT
  • நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரிக்க உத்தரவு
  • குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர அறிவுறுத்தினார்

கலவை:

ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார். அப்போது அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

பின்னர் மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையிலுள்ள மனுக்கள் பற்றி கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்று உத்தர விட்டார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News