உள்ளூர் செய்திகள்

வாணிபக் கழகம் அருகே நடந்து செல்லும் போது வாலிபர் மயங்கி விழுந்து சாவு

Published On 2023-06-05 13:23 IST   |   Update On 2023-06-05 13:28:00 IST
  • கிரிவலம் சென்றபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 40)இவர் நேற்று முன்தினம் பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர் கிரிவலம் சென்று கொண்டிருந்தார்.

செங்கம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அருகே நடந்து செல்லும் போது ராஜேஷ் திடீரென மயங்கிவிழுந்துள்ளார்.

அப்போது அதே பகுதியில் கிரிவலம் சென்று கொண்டிருந்த பக்தர்கள் உட்பட அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News