உள்ளூர் செய்திகள்

தவறி விழுந்து மூதாட்டி பலி

Published On 2023-09-12 09:06 GMT   |   Update On 2023-09-12 09:07 GMT
  • பஸ்சில் இருந்து இறங்கியபோது பரிதாபம்
  • வழக்குப்பதிவு செய்து விசாரணை

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு நிர்மலா நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி. இவரது தாயார் பாத்திமா (வயது 63). இவர் திருவண்ணா மலை அருகே மருத்துவாம்பாடியில் உள்ள கணவர் லூர்து சாமியை வாரத்துக்கு ஒருமுறை சந்தித்து விட்டு வருவது வழக்கம்.

அதன்படி பாத்திமா மருத்துவாம்பாடிக்கு சென்றுவிட்டு மீண்டும் சேத்துப்பட்டுக்கு பஸ்சில் வந்தார். நிர்மலா நகர் வந்தவுடன் பஸ்சின் படிக்கட்டில் இறங்கிய போது திடீ ரென பாத்திமா தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சேத்துப்பட்டு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News