உள்ளூர் செய்திகள்

பூ வியாபாரியிடம் வழிப்பறி

Published On 2023-06-10 07:32 GMT   |   Update On 2023-06-10 07:32 GMT
  • 4 பேர் கைது
  • செல்போன், பணம், இருச்சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல்

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன்(வயது 30). இவர் அந்த கிராமத்தில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த 4-ந் தேதி நள்ளிரவு சேத்துப்பட்டில் திருமண வீட்டாரிடம் பூமாலைகளை கொடுத்து விட்டு இருச்சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

வந்தவாசி-சேத்பட் சாலை, சின்ன கோழிப்பு லியூர் கூட்டுச் சாலை அருகே வரும்போது 2 பைக்குகளில் வந்த 4 பேர் தேவனை வழிமடக்கினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ஒரு செல்போன், பணம் மற்றும் இருச்சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தேவன் அளித்த புகாரின்பேரில் தேசூர் போலீசார் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சேத்துப்பட்டு அருந்ததியர் பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்(23), சுனில்(23), சஞ்சய்(21) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து தேவனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் நேற்று போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன், பணம், இருச்சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News