உள்ளூர் செய்திகள்
கண்ணமங்கலத்தில் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
- சிறப்பு தீபாராதனை நடைபெற்றது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் ேகாவில் மற்றும் கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நேற்று நந்திபகவானுக்கு சனிமகா பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு நந்திபகவானுக்கு பல்வேறு வகையான பொருட்கள் மூலம் அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பிரதோஷ நாயகர் உட்பிரகார உலா நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோயில் விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.