உள்ளூர் செய்திகள்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ெதாழிலாளர்கள் முற்றுகையிட்ட காட்சி.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Published On 2023-06-17 15:01 IST   |   Update On 2023-06-17 15:01:00 IST
  • 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் புகார்
  • தொடர்ந்து பணி வழங்கக்கோரி வலியுறுத்தல்

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பனையூர் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு சரிவர பணி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து தொழிலாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் நேற்று ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .

மேலும் தொடர்ந்து பணி வழங்கக்கோரி கோஷமிட்டனர். தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து, போராட்டகாரர்களிடம் சமரசம் பேசினர்.

மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News