உள்ளூர் செய்திகள்

பஸ்சில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

Published On 2023-06-19 14:49 IST   |   Update On 2023-06-19 14:49:00 IST
  • எதிர்பாராத விதமாக நடந்தது
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தாலுகா வட ஆண்டாப்பட்டு கிராமம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி பரிமளா (வயது 63). இவர் நேற்று மாலை வேலூரில் இருந்து திருவண் ணாமலைக்கு தனியார் பஸ்சில் பயணம் செய்தார்.

அந்த பஸ்சில் அவர் முன்படிக்கட்டிற்கு நேராக உள்ள 3 பேர் அமரும் இருக்கையில் அமர்ந்து வந்து உள்ளார். அந்த பஸ் தீபம் நகர் மேம்பாலத்தின் கீழ் திரும்பும் போது அவரது பை கீழே விழாமல் இருக்க பிடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக பையுடன் அவர் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு முன்பக்க தலையில் பலத்த காயம் ஏற் பட்டது. பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச் சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஆம் புலன்சு மூலம் கொண்டு சென்றனர்.

அங்கு பரிமளாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News