உள்ளூர் செய்திகள்

கற்பகநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த காட்சி.

கற்பகநாதர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-25 08:31 GMT   |   Update On 2023-06-25 08:31 GMT
  • பொது மக்களே நிதி திரட்டி புனரமைப்பு
  • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குபட்ட இ.பி.நகரில் பழமைவாய்ந்த கற்பகாம்பிகை கோவில் உள்ளது.

பொதுமக்களே நிதி திரட்டி முத்துமாரியம்மன் கற்பகாம்பிகை கற்பகநாதர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் இன்று நடந்தது. முன்னதாக ஏற்கனவே அமைக்கபட்ட யாகசாலையில் புனித தீர்த்தகுடம் முளைப்பாரி எடுத்து வருதல் திருவிளக்கு வழிபாடு புண்ணிய நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர்வழிபாடு கணபதி ஹோமம், கோபூஜை, நடைபெற்றது.

இதனைதொடர்ந்து இன்று காலையில் யாகசாலையில் விநாயகர் முருகர் தென்முகபரமன் அண்ணாமலையார் நான்முகன் துர்கையம்மன் சண்டீசுவரர் நடராசர் சிவகாமி நந்தி கௌமாரி மகேஸ்வரி வைஸ்ணவி பிராம்மி சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கு பூஜைகள் நடத்தினர்.

பின்னர் புணிதநீரை கோவில் வளாகத்தில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். ஸ்ரீ கற்பகநாதர் மற்றும் கற்பகாம்பிகை ஆகியோருக்கு ஒரே நேரத்தில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.

பக்தர்கள் என கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இறுதி யாக கோவில் நிர்வாகம் சார்பில்அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News