உள்ளூர் செய்திகள்

இளம் பெண்ணை மிரட்டிய வாலிபருக்கு ஜெயில்

Published On 2023-08-23 08:15 GMT   |   Update On 2023-08-23 08:15 GMT
  • சைபர் கிரைம் போலீசில் புகார்
  • ஜெயிலில் அடைத்தனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் பெரணமல்லூர் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (21) ஆபாசமாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என தன்னை மிரட்டுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் தலைமையான போலீசார் வசந்தகுமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News