உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி

Published On 2023-10-15 08:40 GMT   |   Update On 2023-10-15 08:40 GMT
  • எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை
  • போலீசார் விசாரணை

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் சி.சி.ரோட்டில் தனி யார் திருமண மண்டபம் அருகே அந்த வழியாக நடந்து சென்ற 70 வயது மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்த மூதாட்டியார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

இது குறித்தும், விபத்துக்கு காரணமான வாகனம் மற்றும் தப்பிய டிரைவர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News