உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவிலான ஓட்டபோட்டி

Published On 2023-10-04 08:18 GMT   |   Update On 2023-10-04 08:18 GMT
  • மாணவர்களுக்கு அழைப்பு
  • கலெக்டர் தகவல்

வேங்கிக்கால்:

திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் வருகிற 7-ந்தேதி காலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள்மற்றும் பொதுமக்கள் இன்று முதல் 7 -ந்தேதி காலை போட்டி தொடங்குவதற்குமுன்பு வரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிறப்பு சான்று, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை இணைத்து அதே அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். குறித்த நேரத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிமுதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரையிலும், 17 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்குகாஞ்சி ரோடு சந்திப்பு முதல் அவலூர்பேட்டை ரோடு பிரிவு வழியாக விளையாட்டு அரங்கம் வரையிலும், 25 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 17 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு திருவண்ணாமலை பஸ் நிலையம் முதல் (அவலூர்பேட்டை ரோடு பிரிவு) மாவட்ட விளையாட்டு அரங்கம் வரையிலும்போட்டிகள் நடைபெறும்.

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், 2-வது பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், 3-வது பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். 4 முதல் 10 ஆம் இடம் வரை பிடிக்கும் வீரர்களுக்கு தலா ரூ.1000 பரிசாக வழங்கப்படும்.

போட்டிகள் குறித்து கூடுதல் விவரங்களை பெற 74017 03484 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News