உள்ளூர் செய்திகள்

டிராக்டர் மோதி கட்டிட ஒப்பந்ததாரர் பலி

Published On 2023-10-04 08:16 GMT   |   Update On 2023-10-04 08:16 GMT
  • வந்தவாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுராமன் (வயது 38). கட்டிட ஒப்பந்ததார ராக வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி பவானி, இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இவர் வந்தவாசியில் இருந்து கீழ் சாத்த மங்கலம் கிராமத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வந்தவாசி- சேத்துப்பட்டு சாலையில் இந்திரா நகர் அருகே சென்றபோது எதிரே வந்த டிராக்டர், இவரது மோட் டார்சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ரகுராமன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகுராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து குறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News