உள்ளூர் செய்திகள்

கல்குவாரி அமைக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்

Published On 2023-08-25 15:19 IST   |   Update On 2023-08-25 15:19:00 IST
  • வாழ்வாதாரம் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதாக கிராம பொதுமக்கள் வேதனை
  • சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் மனு

ஆரணி:

ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்து ஊராட்சிக்குட்பட்ட விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் புதியதாக கல்குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த கல்குவாரி தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் கிராம பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது சம்பந்தமாக முள்ளண்டிரம் கிராம பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவில்லை திடீரென கல்குவாரி அமைக்க பட்டுள்ளதாகவும் இதனால் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதாக கிராம பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதனையடுத்து கிராம மக்கள் ஆரணி டவுன் உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகிய அலுவலகத்தில் கல்குவாரி தடை செய்ய கோரி மனு அளித்தனர்.

பின்னர் ஆரணி அதிமுக எம்.எல்.ஏ அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமானசேவூர் ராமசந்திரனிடம் புதியதாக அமைக்கப்பட்ட கல்குவாரியை ரத்து செய்ய கோரி மனுக்கள் அளித்தனர்.

இது சம்பந்தமாக கலெக்டரிடம் பரிந்துரை செய்து கல்குவாரியை மூட நடவடிக்கை எடுப்பதாக சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கிராம மக்களுக்கு உறுதி அளித்தார்.

Tags:    

Similar News