உள்ளூர் செய்திகள்

சாராயம் குறித்து விழிப்புணர்வு

Published On 2023-06-11 13:56 IST   |   Update On 2023-06-11 13:56:00 IST
  • பிரசார நோட்டீஸ் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டது
  • காவல் துறை, வருவாய் துறை இணைந்து நடத்தியது

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிபாளையம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் கலால், வருவாய் மற்றும் காவல் துறை இணைந்து கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர்.

இதில் ஆரணி தாசில்தார் மஞ்சுளா, கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, கோட்ட கலால் அலுவலர் தமிழ் மணி உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.கள்ளத்தனமாக சாராயம் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என வாட்ஸ் அப் எண்ணுடன் விழிப்புணர்வு பிரசார நோட்டீஸ் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டது.

Tags:    

Similar News