உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலைக்கு வந்த ஆன்மிக சுற்றுலா ரெயில்

Published On 2023-08-10 08:38 GMT   |   Update On 2023-08-10 08:38 GMT
  • 440 பேர் தரிசனம்
  • கிரிவலம் சென்றனர்

வேங்கிக்கால்:

ெரயில்வே சுற்றுலா மற்றும் உணவுத் துறை சார்பில் ஆன்மிக சுற்றுலா ரயில் செகந்திராபாத்தில் இருந்து நேற்று புறப்பட்டு இன்று காலை திருவண்ணாமலை ெரயில் நிலையம் வந்தடைந்தது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஆன்மிக பக்தர்கள் 440 பேர் சுற்றுலா ெரயிலில் வந்தனர்.

இவர்கள் அருணசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று அண்ணாமலையாரை தரிசித்து பின்னர் கிரிவலம் சென்றனர்.

இன்று இரவு 10 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் சுற்றுலா ெரயில் மதுரை மற்றும் ராமேஸ்வரம் செல்கிறது.

Tags:    

Similar News