உள்ளூர் செய்திகள்

3 மணி நேரம் மின்தடை

Published On 2023-11-27 09:39 GMT   |   Update On 2023-11-27 09:39 GMT
  • பொதுமக்கள் அவதி
  • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரக்கோணம்:

இச்சிபுத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து செந்தில் நகர், நாகலம்மன் நகர், கைனூர், வாணியம்பேட்டை உள்ளிட்ட அரக்கோணம் நகர எல்லை பகுதிகளுக்கு மின்சாரம் வழங் கப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு சில நிமிடமே பெய்த லேசான மழை காரணமாக அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில் இந்த பகுதியில் இரவு நேரங்களில் சிறு தூறல் அல்லது காற்று வீசினாலே மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொது மக் கள், குழந்தைகள் கொசுக்கடியால் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். மேலும், அடிக்கடி இது போன்று பல மணி நேரம் ஏற்படும் மின் வெட்டால் பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளா கின்றனர்.

எனவே இது போன்று அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம், மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News