உள்ளூர் செய்திகள்

காரமடை திம்மராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண விழா

Published On 2022-10-06 09:58 GMT   |   Update On 2022-10-06 09:58 GMT
  • திம்மராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.
  • 3 மணிக்கு திம்மராய பெருமாள் கருடவாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே காரமடை கா.புங்கம்பாளையம் திம்மராய பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து 10 மணிக்கு அம்மன் அழைப்பும் மற்றும் பஜனை நடைபெற்றது. பின் மதியம் 1.30 மணிக்கு மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 3 மணிக்கு திம்மராய பெருமாள் கருடவாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திம்மராயபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த உற்சவத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News