உள்ளூர் செய்திகள்

திருச்செங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

Published On 2022-09-29 07:37 GMT   |   Update On 2022-09-29 07:37 GMT
  • தினந்தோறும் மாலையில் கன்யா பூஜை சுமங்கலி பூஜை சண்டி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு விதமான பூஜைகள் நடைபெறுகிறது.
  • 9 நாட்களுக்கும் அந்தந்த நாளுக்குரிய ராகங்களுடன் மங்கள வாத்திய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு அம்மன் குளக் கரையில் அமைந்துள்ள மிகப் பழமையான பத்திர காளி அம்மன் என்ற ஸ்ரீ அழகு நாச்சியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு கோவில் மகா மண்டபத்தில் பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது.

தினந்தோறும் மாலையில் கன்யா பூஜை சுமங்கலி பூஜை சண்டி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு விதமான பூஜைகள் நடைபெறுகிறது. 9 நாட்களுக்கும் அந்தந்த நாளுக்குரிய ராகங்களுடன் மங்கள வாத்திய நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஸ்ரீ பத்ரகாளி அம்ம னுக்கு தினம்தோறும் நண்பகல் வேளையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, பல்வேறு மங்களப் பொருட்களைக் கொண்டு வித விதமான அலங்காரங்கள் செய்யப்படு கிறது நேற்று காய்கறிகளை கொண்டு அம்பாள் அலங்கரிக்கப்பட்டு சாகம்பிரியாள் சுவாமியாக காட்சி தந்தார்.இதனால் திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை வேளையில் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இதுகுறித்து தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், இங்கு கடந்த 24 வருடங்க ளாக நவராத்திரி விழா கொலு வைக்கப்பட்டு சிறப்பாக நடந்து வரு கிறது. தினந்தோறும் பூஜைகள் நிறைவடைந்த பிறகு பக்தர்களுக்கு சுவையான அன்னதானம் வழங்கப்படுகிறது என்றார்.

Tags:    

Similar News