உள்ளூர் செய்திகள்

தீர்த்தவாரி விழா நடந்தது.

சீனிவாச பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி

Published On 2022-10-06 09:35 GMT   |   Update On 2022-10-06 09:35 GMT
  • சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தில் விரதமிருந்து பெருமாளை வழிபடுவர்.
  • தேர் வீதிவுலா முடிந்து காவிரி ஆற்றில் பெருமாளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை அருகே நீடூர் சாலை பல்லவராயன்பேட்டையில் அமைந்துள்ள தென்தி ருப்பதி வேங்கடாஜலபதி என்று அழைக்கப்படும் சீனிவாச பெருமாள் கோயிலில் தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தில் விரதமிருந்து பெருமாலை வழிபடுவார்கள்.

எஸ்.ஆர்.பட்டர் சுவாமிகள் தலைமையில் நேற்று தேர் வீதிவுலா முடிந்து காவிரி ஆற்றில் சுவாமி பெருமாளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏராமான பக்தர்கள் ஆற்றில் இறங்கி கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் எழுப்பியவாறு குளித்து சாமியை வழிப்பட்டனர்.

கோயில் தர்மகர்த்தாக்கள் சந்தானகிருஷ்ணன், மகாதேவன், ரெங்கநாதன், லெட்சுமிநாராயணன், மற்றும் கோயில் ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News