உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கொடைக்கானல் விடுதியில் தேனி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் சாவு

Published On 2023-09-07 12:27 IST   |   Update On 2023-09-07 13:41:00 IST
  • தேனி ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றியவர் கொடைக்கானல் விடுதியில் மாரடைப்பால் இறந்தார்.
  • கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைக்கானல்:

தேனி ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றியவர் பாஸ்கரன் (வயது 56). இவருக்கு திருமணமாகி நாகஜோதி என்ற மனைவியும், ஜெகதீஸ் (23) என்ற மகனும், பிரியதர்ஷினி (22) என்ற மகளும் உள்ளனர்.

பாஸ்கரன் தனது நண்பரான லெனின் என்ப வருடன் கொடைக்கா னலுக்கு சென்றார். இவர்கள் அங்குள்ள தனது நண்பர்களை சந்தித்து விட்டு நாயுடுபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கினார்.

மறுநாள் காலையில் லெனின் எழுந்து தனது நண்பர் பாஸ்கரனை எழுப்பினார். அப்போது அவர் அசைவற்ற நிலையில் கிடந்தார். உடனே விடுதி ஊழியர்களுடன் சேர்ந்து பாஸ்கரனை கொடைக்கா னல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மார டைப்பால் உயிரிழந்திரு க்கலாம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News