உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் மளிகை கடையில் ரூ.40 ஆயிரம் திருட்டு

Published On 2023-05-01 08:25 GMT   |   Update On 2023-05-01 08:25 GMT
  • மளிகை கடைக்கு இன்று மதியம் டிப்- டாப் ஆசாமி வந்தார்.
  • கல்லா பெட்டியில் இருந்த ரூ. 40 ஆயிரத்தை திருடி விட்டு தப்பி சென்று விட்டார்.

கடலூர்:

பண்ருட்டி பொன்னுசாமி தெருவில் மளிகை கடை உள்ளது. இந்த மளிகை கடைக்கு இன்று மதியம் டிப்- டாப் ஆசாமி வந்தார்.அவர் பூண்டு விலை என்ன என்று கேட்டார். கடைக்காரர் பூண்டுவை எடுக்க உள்ளே சென்ற போது டிப்- டாப் ஆசாமி கடையின் கல்லா பெட்டியில் இருந்த ரூ. 40 ஆயிரத்தை திருடி விட்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து மளிகை கடை உரிமையாளர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ. 40 ஆயிரத்தை திருடி சென்ற டிப்-டாப் ஆசாமியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News