உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே நகை, வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு

Published On 2023-11-21 06:53 GMT   |   Update On 2023-11-21 06:53 GMT
வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து நிலையில் கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் உள்ளே சென்று பார்த்தார்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ராஜபாண்டலத்தை சேர்ந்தவர் மாரி(67) விவசாயி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பழனி கோவிலுக்கு சென்று விட்டார். இந்நிலையில் மீண்டும் மாரி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து நிலையில் கிடந்துள்ளது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 4 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் நகை, வெள்ளி கொலுசு, வெள்ளி பாத்திரம், பத்தாயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து மாரி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News