உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே நிறுத்தப்பட்ட டிராக்டரில் இருந்து பேட்டரி திருட்டு

Published On 2022-12-28 07:21 GMT   |   Update On 2022-12-28 07:21 GMT
  • காரில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திருடிதப்பி செல்ல முயன்றுள்ளனர்.
  • பேட்டரி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கடலூர்:

பண்ருட்டி அருகே காட்டு க்கூடலூரை சேர்ந்தவர் முருகவேல். விவசாயி. நேற்று இவரது வீட்டில் நிறுத்தப் பட்டிந்த டிராக்டரில் இருந்து பேட்டரியை காரில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திருடிதப்பி செல்ல முயன்றுள்ளனர். இதை பார்த்த முருகவேல் மற்றும் கிராம மக்கள் பேட்டரி திருடர்களை மடக்கிபிடித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.

முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பயிற்சி) ராஜாராம் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் வடலூர் அடுத்த ராஜாகுப்பம் வடக்கு தெரு தட்சணா மூர்த்தி (வயது 22), கருங்குழி மாரியம்மன் கோவில் தெரு விஜயராகவன் (22) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து இவர்களை கைது செய்து இவர்களிடமிருந்து பேட்டரி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News