உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூரிஸ்ட் வேன் திருட்டு

Published On 2023-08-01 08:56 GMT   |   Update On 2023-08-01 08:56 GMT
  • மருத்துவக் கல்லூரி சாலை 4-வது கேட் அருகே வேனை நிறுத்தி வைத்து விட்டு வெளியே சென்றார்.
  • திரும்பி வந்து பார்த்த போது வேனை காணவில்லை

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள நீலகிரி அருள் பிரகாசம் நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் ( வயது 43).

இவர் தனது டூரிஸ்ட் வேனை மருத்துவக் கல்லூரி சாலை 4-வது கேட் அருகே நிறுத்தி வைத்து விட்டு வெளியே சென்றார்.

திரும்பி வந்து பார்த்தபோது டூரிஸ்ட் வேனை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்ச்செல்வன் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து அவர் மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டனர்.

முதல் கட்ட விசாரணையில் புதுக்கோட்டை காந்திநகர் பகுதியை சேர்ந்த தினேஷ் ( 19 ) என்பவர் வேனை திருடி சென்றது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து தினேஷை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News