உள்ளூர் செய்திகள்

சேரன்மகாதேவி அருகே தோட்டத்தில் திருட்டு

Published On 2023-02-27 09:26 GMT   |   Update On 2023-02-27 09:26 GMT
  • தோட்டத்தில் மேற்பார்வையாளராக அஜித்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
  • திருட்டு குறித்து அஜித்குமார் பத்தமடை போலீசில் புகார் அளித்தார்.

நெல்லை:

சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடையில் கருப்பங்குளம் பகுதியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரது தோட்டம் உள்ளது. இங்கு குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ராம் அஜித்குமார்(வயது 31) என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 23-ந்தேதி இவர் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்த 3 மின்மோட்டார்கள், தண்ணீருக்காக வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் குழாய்கள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தது.

இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

Tags:    

Similar News