உள்ளூர் செய்திகள்

மளிகை கடையில் திருட்டு

Published On 2023-08-31 15:14 IST   |   Update On 2023-08-31 15:43:00 IST
  • பின்னர் வந்து பார்த்த போது கடையில் சீட்டு பிரிக்கப்பட்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தூர்,  

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத் துள்ள செல்லம்பட்டி பகுதி யை சேர்ந்தவர் மதியழகன் (வயது52). இவர் அப்பகுதி யில் மளிகை கடை நடத்தி வந்தார். இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்த போது கடையில் சீட்டு பிரிக்கப்பட்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து மதியழகன் நாகரசம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News