உள்ளூர் செய்திகள்
வடக்குகுளத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
- கடந்த சில மாதத்திற்கு முன்பு பணிகள் தொடங்கிய நிலையில் இன்னும் முடிவடையவில்லை.
- குளத்தில் பல மாதங்களாக தண்ணீர் இல்லை.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், மெலட்டூரில் பேரூராட்சி பகுதியில் உள்ள வடக்கு குளம் சுற்று சுவர் அமைத்து நான்கு கரைகளிலும் பூங்கா அமைக்கும் பணி ரூ. 117 லட்ச மதிப்பில், கடந்த சில மாதத்திற்கு முன்பு பணிகள் தொடங்கிய நிலையில் இன்னும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.
வடக்கு குளத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் இன்னும் குளத்தில் தண்ணீர் திறந்து விடுவது தாமதமாகி வருகிறது அதனால் குளத்தில் பல மாதங்களாக தண்ணீர் இல்லாததால் வறட்சியின் காரணமாக வடக்கு குளத்தை சுற்றியுள்ள குடிநீர் ஆதாரங்கள் செயல் இழக்கும் அபாயம் உள்ளதால் வடக்கு குளத்தில் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து குளத்தில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.