ஒட்டன்சத்திரம் சந்தைக்கு இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கால்நடைகள்.
ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி மூலம் வாரச்சந்தை தொடங்கியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி
- பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படும் விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை - நகராட்சியே சந்தையை எடுத்து நடத்த முடிவு செய்தது.
- ஆட்டுச்சந்தையிலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என அறிவிப்பு பலகை அங்கு ஒட்டப்பட்டு இருந்தது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை களில் கால்நடை சந்தை நடத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மதியம் தொடங்கும் இந்த சந்தை திங்கட்கிழமை பிற்பகல் வரை நடைபெறும். இதே போல வியாழக்கிழமைகளில் ஆடு, கோழி, சேவல், தோல் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாடு, ஆடுகளை வாங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வரும் வியாபாரிகளிடம் மாட்டுக்கு ரூ.450 வரையிலும், ஆட்டுக்கு ரூ.200, சேவலுக்கு ரூ.140 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் பெரும் தொகை சந்தைக்கு வரி கட்டும் தொகையிலேயே சென்று விடுவதால் பெரும்பாலான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இங்கு வருவதை தவிர்த்து வந்தனர்.
இதனால் கன்னிவாடி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட சந்தைகளைத் தேடி வியாபாரிகள் செல்லும் நிலை ஏற்பட்டது. இது குறித்து நகராட்சி அதிகாரி களிடம் தொடர்ந்து புகார்கள் வந்ததால் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஏற்கனவே ஏலம் எடுத்தவர்கள் ரூ.1 கோடியே 71 லட்சம் கட்டணம் செலுத்தி இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் தாங்கள் இந்த தொகையை நகராட்சிக்கு செலுத்தியதால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டதாக கூறினர்.
இதன் காரணமபாகவே கூடுதல் தொகை வசூலிப்ப தாகவும் தெரிவித்தனர். எனினும் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்க ப்படும் விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததால் இந்த முறை நகராட்சியே சந்தையை எடுத்து நடத்த முடிவு செய்தது.
அதன்படி நகராட்சி கட்டுப்பாட்டில் வந்த வாரச்சந்தை இன்று முதல் செயல்பட தொடங்கியது. இதற்காக சந்தைக்கு வரும் நபருக்கு ரூ.50 கட்டணம், எருது, பசு, குதிரை, எருமை, கழுதை உள்ளிட்ட கால்நடைகளுக்கு ரூ.100, கன்றுக்குட்டிக்கு ரூ.50 என கட்டணம் வசூலிக்கப்பட்டது.
ஏற்கனவே வசூலிக்க ப்பட்டு வந்த கட்டணத்தை விட இது மிகவும் குறைவு என்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதே போல வியாழக்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தையிலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என அறிவிப்பு பலகை அங்கு ஒட்டப்பட்டு இருந்தது.
ஆட்டுக்கு ரூ.25, கோழி, சேவல், வாத்து, ஆகியவ ற்றுக்கு ரூ.20 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். தனியாரிடம் இருந்த ஒட்டன்சத்திரம் வாரச்சந்தை நகராட்சி கட்டுப்பாட்டில் வந்ததால் இனி வரும் நாட்களில் சந்தைக்கு அதிக அளவு வியாபாரிகள் வரக்கூடும் என தெரிவித்த னர். இன்று நடந்த சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. சந்தையில் ஏலம் முறையாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் நகர் மன்ற தலைவர் திருமலை ச்சாமி, துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, ஆணையாளர் சக்திவேல் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.