உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

அய்யலூர் அருகே பைக்குகள் திருடிய வாலிபருக்கு தர்ம அடி

Published On 2023-08-09 08:11 GMT   |   Update On 2023-08-09 08:11 GMT
  • சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபர் சாலையோரம் நின்றிருந்த பைக்குகளை நைசாக சாவி போட்டு திறந்து அதை திருடி மறைவான இடத்தில் பதுக்கினார்.
  • பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

வடமதுரை:

அய்யலூர் அருகே கடவூர் பிரிவு சாலையில் ஒரு வாலிபர் சந்தேகத்தி ற்கிடமாக சுற்றித்திரிந்தார். சாலையோரம் நின்றிருந்த பைக்குகளை நைசாக சாவி போட்டு திறந்து அதை திருடி மறைவான இடத்தில் பதுக்கினார்.

இதேபோல் 5க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடியதை கண்காணிப்பு காமிரா பதிவு மூலம் பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

மேலும் இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வாலிபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். பொது மக்கள் தாக்கியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இதனால் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணையில் அந்த வாலிபர் திருச்சி மாவட்டம் எலமனம் பகுதியை சேர்ந்த கதிரேசன் என தெரிய வந்தது. மேலும் அவருடன் வந்த 2 வாலி பர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பைக் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவு திருடு போகிறது. வெளி யூர்களில் இருந்து வரும் நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.

எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News