தச்சுத்தொழிலாளர்கள் விதவிதமான சிறு தேர்களை தயார் செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ள காட்சி.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு திட்டக்குடியில் தயாரிக்கப்பட்ட சிறு தேர் விற்பனை அமோகம்
- சிறு தேர்களை தச்சுத் தொழிலாளர்கள் சுமார் 1 மாதம் முன்பே தயார் செய்து விற்பனை செய்வார்கள்.
- அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஆடிப் பெருக்கு பண்டிகையின் நடைமுறைகளை சொல்லி கொடுக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் ஆடிப்பெருக்கு பண்டிகையை அருகில் உள்ள ஏரிகளின் படுகைகளில் கொண்டாடுவது வழக்கம். அப்போது சிறுவர்கள், சிறுமிகள் சப்பரத்தட்டி என்னும் சிறு தேரினை வண்ண, வண்ண காகிதங்கள் கொண்டு அலங்கரித்து ஓட்டி விளையாடுவார்கள். அதற்கான சிறு தேர்களை தச்சுத் தொழிலாளர்கள் சுமார் 1 மாதம் முன்பே தயார் செய்து விற்பனை செய்வார்கள்.
ஆடிப்பெருக்கை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் சப்பரத்தட்டி ஓட்டுவது மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கும். இதனால் திட்டக்குடியில் தச்சுத்தொழிலாளர்கள் தற்போது விதவிதமான சிறு தேர்களை தயார் செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். அளவு மற்றும் கலைநயத்தை பொறுத்து ஒரு தேர் ரூ.250 முதல் ரூ.350 வரை விற்பனை செய்கின்றனர். சிறுதேர் தயாரிக்கும் தச்சுத்தொழிலாளர்களிடம் விற்பனை குறித்து கேட்டபோது, கடந்த காலங்கள் போல் சிறுவர், சிறுமிகளுக்கு சப்பரத்தட்டி ஓட்டுவது தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளான சப்பரத்தட்டி ஓட்டுதல் போன்ற விளையாட்டுகளை சொல்லித்தந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஆடிப் பெருக்கு பண்டிகையின் நடைமுறைகளை சொல்லி கொடுக்க வேண்டும்.
மாலை வேளையில் அலங்கார தேவதைகளாக பெண்கள், குழந்தைகள் குடும்பத்துடன் செல் வது தெருவே திருவிழா கோலத்துடன் கோலா கலமாக திகழும். மேலும் இந்த அலங்கார சப்பரங்களை சிறுவர்கள் இழுத்து செல்வதும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அடுத்த தலைமுறைகளில் சப்பரத்தட்டி என்ற பொருள் தெரியாமல் போய்விடும். அதுமட்டுமின்றி இது போன்று பண்டிகைகலால் உற்பத்திப் பொருட்களின் விற்பனையை ஊக்கப்ப டுத்தும் விதமாக அரசு பாரம்பரிய பண்டிகைகளை அரசு விழாவாக கொண்டாடி தமிழ் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் வளர்க்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.