உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்த மூதாட்டி சாவு

Published On 2023-02-18 14:58 IST   |   Update On 2023-02-18 14:58:00 IST
  • பெருமாயி (வயது 82). கூலிதொழிலாளி. இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
  • தீராத தலைவலி இருந்து வந்தது. பல்வேறு மருத்துவமனை களுக்கு சென்று சிகிச்சை பெற்றும், தலைவலி சரியாக வில்லை.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கருமகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாயி (வயது 82). கூலிதொழிலாளி. இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தனியாக வசித்து வந்த பெருமாயிக்கு தீராத தலைவலி இருந்து வந்தது.

பல்வேறு மருத்துவமனை களுக்கு சென்று சிகிச்சை பெற்றும், தலைவலி சரியாகவில்லை. இதனால் விரத்தியில் இருந்த பெருமாயி, வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து உள்ளார். இதனால் வயிறு எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி பெருமாயி உயிரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News