உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து திருட முயன்ற ஆசாமி கைது

Published On 2023-02-17 15:25 IST   |   Update On 2023-02-17 15:25:00 IST
  • வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றுள்ளார்.
  • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகேயுள்ள சீகலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நீலம்மாள் (வயது 48). இவர் நேற்று தனது வீட்டில் சமைத்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கேஸ் தீர்ந்து விட்டது. இதையடுத்து வீட்டை பூட்டிவிட்டு சிலிண்டர் வாங்க சென்றார். சாவியை நிலைவாசலில் மேல்புறம் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இதை நோட்டமிட்ட அதே பகுதியை சேந்த சீனப்பா என்பவர் அந்த சாவியை எடுத்து நீலம்மாலின் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றுள்ளார்.

அதற்குள் நீலம்மாள் திரும்பி விட்டார். தன வீட்டிற்குள் சீனப்பா நுழைய முயற்சி செய்வதை கண்டு கூச்சல் போட்டார்.

இதையடுத்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் திரண்டு வந்து சீனப்பாவை மடக்கி பேரிகை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

Tags:    

Similar News