உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறையில் புகையிலை பாக்கெட்டுகளை கடத்தியவர் கைது

Published On 2023-02-19 10:14 GMT   |   Update On 2023-02-19 10:14 GMT
  • மயிலாடுதுறையில் புகையிலை பாக்கெட்டுகளை கடத்திவர் கைது செய்யப்பட்டார்.
  • 500 போதை கலந்த புகையிலை பாக்கெட்டுகளையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதியில் வள்ளலார் கோவில் முன்பு மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் வந்த ஒருவரை நிறுத்திய போலீசார் அவரை சோதனையிட்டனர். சோதனையில் அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட போதை கலந்த புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர் குத்தாலம் ராஜகோபாலபுரம் மந்தக்கரை தெருவை சேர்ந்த மோகனசுந்தரம் மகன் பிரசாந்த் (வயது26) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பிரசாந்தை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்த 500 போதை கலந்த புகையிலை பாக்கெட்டுகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News