உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே நீரில் மூழ்கி முதியவர் பலி

Published On 2022-06-21 09:50 GMT   |   Update On 2022-06-21 09:50 GMT
  • களக்காடு கீழபத்தையை சேர்ந்தவர் கிருஷ்ணன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழபத்தை ஊரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது60).

இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மேலவடகரை பாலத்தின் அருகில் பச்சை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென நீரில் மூழ்கி இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News