உள்ளூர் செய்திகள்

சொகுசு காரில்குட்கா கத்தியவர் கைது

Published On 2023-03-13 15:41 IST   |   Update On 2023-03-13 15:41:00 IST
  • ஜெய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பலவந்திரம் (வயது23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
  • 4 லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள 352 குட்கா புகையிலை பொருட்கள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜுவாடி சோதனை சாவடியில் சிப்காட் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை மறித்து சோதனை செய்தபோது போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

4 லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள 352 குட்கா புகையிலை பொருட்கள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். குட்கா பொருட்களை கடத்திய பெங்களூருவில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பலவந்திரம் (வயது23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ராகுல் தப்பி ஓடிவிட்ட நிலையில் அவரைத் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News