உள்ளூர் செய்திகள்
பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது
- ஓசூர் டவுன் போலீசார் மலைக்கோயில் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அந்த சென்டரில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது விசாரணையில் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசார் மலைக்கோயில் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் நடத்தி வரும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஜிஸ்னா மோல் பேபி (வயது 28) என்பவர் அந்த சென்டரில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது விசாரணையில் தெரியவந்தது.
இதை அடுத்து போலீசார் ஜிஸ்னா மோல் பேபி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.