உள்ளூர் செய்திகள்

சிறுமி மாயம்

Published On 2023-06-01 10:20 GMT   |   Update On 2023-06-01 10:20 GMT
  • நேற்று முன்தினம் சிறுமி கடைக்கு செல்வதாக கூறி சென்றார்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள பெரியபாப்பி நாயக்கனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமி கடைக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்க வில்லை.

இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News