உள்ளூர் செய்திகள்

காதல் மனைவியை கத்தியால் குத்திய கணவர்

Published On 2022-12-25 15:00 IST   |   Update On 2022-12-25 15:00:00 IST
  • திருமணத்துக்கு பிறகு சத்யாவை ஆதிக் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
  • கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகேயுள்ள தடிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஆதிக் (வயது 30).

இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சத்யா (23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையுள்ளது.

இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு சத்யாவை ஆதிக் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இதேபோல சத்யாவிடம் தகராறில் ஈடுபட்ட ஆதிக் அவரை தாக்கி கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சத்யா தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தன்னை கத்தியால் குத்தி காயப்படுத்தியது தொடர்பாக ஆதிக் மீது கெலமங்கலம் போலீசில் சத்யா புகார் செய்துள்ளார்.

புகாரின் பேரில் ஆதிக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News